Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓட்டப்பிடாரத்தில் மனுதாக்கல் இல்லை

ஏப்ரல் 24, 2019 06:13

திருநெல்வேலி: திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தனி தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரராஜ், தகுதி இழப்பு நடவடிக்கையால் பதவி இழந்தார். இத்தொகுதியில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் ஏப் 22ல் துவங்கியது. ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் அதிகாரியாக கலால்துறை உதவி ஆணையர் சுகுமார் செயல்படுகிறார். அவரிடம் இருந்து நேற்று வரையிலும் 17 மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் இரண்டாவது நாளான நேற்றும் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 


 

தலைப்புச்செய்திகள்